புத்தளம் - எலுவாங்குளம் பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் டீசலைப் பெற்றுத்தருமாறு கோரி இன்று எலுவாங்குளம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எலுவாங்குளம் பகுதியில் சுமார் 660 ஏக்கரில் ஒவ்வொரு வருடமும் விவசாயம் செய்து வருவதாகவும், இம்முறை ஏற்பட்ட உரம் தட்டுப்பாடு மற்றும் டீசல் இல்லாமையின் காரணமாக 300 ஏக்கர் நிலப்பரப்பிற்கே விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
சிறுபோக விவசாயம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் உழவு இயந்திரங்களுக்கு டீசல்இல்லாமையினால் விவசாயத்தை மேற்கொள்வதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்குள் டீசலைப் பெற்றுத்தராவிட்டால் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி விவசாய மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வைத்திய
மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் இனந்தெரியாத மிருகம் ஒன்ற
மாத்தறை - அக்குரஸ்ஸ மாரம்ப பிரதேசத்தில் இளம் தம்பதியி
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றும
புத்தளத்தில் டீசலுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வ
புத்தளத்தில் ஹோட்டல் ஒன்றில் களியாட்ட நிகழ்வில் ஈடுப
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதற்கு போதியளவு
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு செயல
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப
குருணாகல் மாவத்தகம – பரகஹதெனிய பகுதியில் நேற்று முன